+2 முடித்த மாணவர்கள் கவனம்! நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் நடக்கும் பெரிய ஏமாற்றம் – பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை

+2 முடித்த மாணவர்கள் கவனம்! நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் நடக்கும் பெரிய ஏமாற்றம் – பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை

தமிழகத்தில் அரசு, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் பயின்று வரும் +2 மாணவர்கள் தற்போது பொதுத் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன், அடுத்த கட்டமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும்.

இதில், ஏற்கனவே ஜேஇஇ (JEE Main) தேர்வை எழுதி முடித்த மாணவர்களும் இருக்கலாம். எம்பிபிஎஸ் (MBBS) படிக்க விரும்புவோர் நீட் (NEET) தேர்வுக்கு முன்கூட்டியே விண்ணப்பித்திருப்பார்கள். இதைத் தவிர, VIT, SNU போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள், மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, நாம் விண்ணப்பிக்கும் இணையதளம் உண்மையில் எந்த நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கானது என்பதை சரியாக உறுதி செய்துகொள்ள வேண்டும்.

🔍 ஒரே பெயர் – பல நகரங்கள் – ஒரே இணையதளம்

பல்கலைக்கழகங்களில் சில, சென்னை, தில்லி, பெங்களூரு, மும்பை போன்ற பல நகரங்களில் செயல்படுகின்றன. ஆனால், இவற்றின் நுழைவுத் தேர்வு முறைகள், சேர்க்கை நடைமுறைகள், கட்டணங்கள் அனைத்தும் தனித்தனியாகவே இருக்கும்.

ஆனால், பல நேரங்களில் இந்த பல நகரங்களில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் ஒரே இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது.

ஒரு மாணவர், “சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என்று அந்த இணையதளத்தில் கிளிக் செய்வார். ஆனால், அந்தப் பக்கம் சில விநாடிகளில் ரிஃபிரஷ் ஆகி, தெரியாமல் தில்லி அல்லது வேறு நகரத்தின் பல்கலைக்கழக விண்ணப்பப் பக்கம் முன் தோன்றியிருக்கும்.

முதல் முறையாக அந்த இணையதளத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த மாற்றம் தெரியாமல் போய்விடுகிறது. இதையே பல பெற்றோர்கள்,

“தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல”
என்று கூறுகின்றனர்.

💸 பணம் செலுத்திய பிறகு தான் உண்மை புரியும்

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, நுழைவுத் தேர்வு கட்டணத்தை செலுத்தும் போதுகூட சந்தேகம் வரும்.
சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு ரூ.1,500 கட்டணம் என்றால்,
திடீரென ரூ.2,500 அல்லது ரூ.3,000 கட்டணம் காட்டப்படும்.

ஆனால்,

“ஒரே பல்கலைதானே”
“பின்னர் சரி செய்து கொள்ளலாம்”

என்று நினைத்து கட்டணத்தை செலுத்திவிடுவார்கள்.

அந்த நிமிடத்திலேயே எல்லாம் முடிந்து விடுகிறது.
ஒருமுறை பணம் செலுத்திவிட்டால்,

  • திருப்பித் தரப்படாது

  • மின்னஞ்சல் அனுப்பினாலும் பயனில்லை

  • தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் பதில் மட்டும் வரும்

ஆனால் பணம் ஒருபோதும் திரும்ப கிடைக்காது.

😔 இரட்டை சோகம் மாணவர்களுக்கு

இந்த தவறு நடந்ததை உணர்ந்த பிறகு, மாணவர்கள் மீண்டும் உண்மையில் விரும்பிய (சென்னை) பல்கலைக்கழகத்திற்கே மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகிறது.

அதாவது,

  • முதலில் தவறாக ரூ.2,500 / ரூ.3,000 செலுத்தி

  • பின்னர் உண்மையான விண்ணப்பத்திற்காக ரூ.1,500 மீண்டும் செலுத்த வேண்டும்

இது நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த சில ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். சிலர்,

“பணம் செலுத்திவிட்டோமே”
என்று நினைத்து, வேறு நகரத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்திற்கே சென்று படிக்கவும் தொடங்கி விடுகின்றனர்.

காற்று மாசு, கடும் வெப்பநிலை, உணவு, தண்ணீர் பிரச்சனைகள் என மிகவும் சிரமமான சூழ்நிலையில் படிக்கும் நிலைக்கும் சில மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

⚠️ மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுரை

  • விண்ணப்பிக்கும்போது மொபைல் போனை விட கணினியைப் பயன்படுத்துங்கள்

  • ஒவ்வொரு கட்டத்திலும் URL (இணைய முகவரி) சரிபார்க்கவும்

  • நகரத்தின் பெயர், பல்கலை வளாகத்தின் பெயர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்

  • “Save & Continue” போன்ற வசதிகளை பயன்படுத்தி மீண்டும் சரிபார்க்கவும்

  • சந்தேகம் வந்தால் உடனே கட்டணத்தை செலுத்தாமல் நிறுத்துங்கள்

📢 பெற்றோர்களின் கோரிக்கை

ஒரே பெயரில் செயல்படும் பல்கலைக்கழகங்கள்,

  • ஒரே இணையதளத்தை வைத்திருப்பதை மாற்ற வேண்டும்

  • அல்லது தெளிவான நகரத் தேர்வு முறையை கொண்டு வர வேண்டும்

  • அல்லது ஒரே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்

என்பதே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெற்றோர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.


புதியது பழையவை

نموذج الاتصال