தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1C பதவிக்கான தேர்வில் பங்கேற்ற தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் – தொகுதி IC (District Educational Officer – IC) பதவிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற சில தேர்வர்களின் சான்றிதழ் பதிவேற்றத்தில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Group 1C தேர்வு – பின்னணி
TNPSC அறிவிக்கை எண் 04 / நாள் 23.04.2025-ன் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் (IC) பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட போது,
சில சான்றிதழ்கள் முழுமையற்றதாகவும்
சில சான்றிதழ்கள் தவறான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது.
📌 பிப்.12 வரை இறுதி வாய்ப்பு
இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது.
🗓 சான்றிதழ் மறு பதிவேற்றம் காலம்:
➡️ 06.02.2026 முதல் 12.02.2026
⏰ இரவு 11:40 மணி வரை
இந்த காலக்கெடுவுக்குள்,
விடுபட்ட சான்றிதழ்கள்
சரியான வடிவில் திருத்தப்பட்ட சான்றிதழ்கள்
எல்லாம் One Time Registration (OTR) தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
🔗 சான்றிதழ் பதிவேற்ற Link
முக்கிய அறிவுறுத்தல்கள்
இந்த தகவல் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் SMS, Email மற்றும் TNPSC குறிப்பாணை (Memo) மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாணையில் (Memo) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
காலக்கெடுவுக்குள் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யத் தவறினால், அந்த தேர்வரின் உரிமை கோரல் (Claim Application) நிராகரிக்கப்படும்.
இதனை TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெளிவுபடுத்தியுள்ளார்.
தேர்வர்களுக்கு அறிவுரை
Group 1C தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,
TNPSC இணையதளத்தை உடனடியாகப் பார்வையிட்டு
Memo-வில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களை
சரியான வடிவில், தெளிவாக
காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
.png)